செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வியாழன், 10 டிசம்பர் 2015 (15:51 IST)

தமிழ்நாட்டில் ஒரு தேசிய நீர்வழித்தடம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தமிழ்நாட்டில் ஒரு நீர்வழித்தடம் உள்ளிட்ட, நாடு முழுவதும் 106 நீர்வழித்தடங்களை தேசிய நீர்வழித்தடங்களாக அறிவிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.


 

 
நாடு முழுவதும் தற்போது 5 தேசிய நீர்வழித்தடங்கள் உள்ளன. இந்நிலையில், தமிழ்நாட்டில் 1  நீர்வழித்தடம், கேரளாவில் 3 நீர்வழித்தடம், கர்நாடகாவில் 5 நீர்வழித்தடம் உள்ளிட்ட 106 நீர்வழித்தடங்கள், தேசிய நீர்வழித்தடங்களாக அறிவிக்கப்பட உள்ளன.
 
இதற்காக தேசிய நீர்வழித்தட மசோதாவில் திருத்தங்கள் செய்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
 
இதன்மூலம், தேசிய நீர்வழித்தடங்களின் எண்ணிக்கை 111 ஆக உயரும் என்பது குறிப்பிடத்தக்கது.