வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahalakshmi
Last Modified: புதன், 17 செப்டம்பர் 2014 (13:40 IST)

நரேந்திர மோடி ஐ.நா. சுற்றுச்சூழல் மாநாட்டில் பங்கேற்கவில்லை

நியூயார்க்கில் ஐ.நா சபை சார்பில் சுற்றுச்சூழல் மாநாடு நடைபெறவுள்ள நிலையில், இதில் திடீர்திருப்பமாக பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டில் பங்கேற்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அடுத்த வாரம் ஐ.நா சபை சார்பாக சுற்றுச்சூழல் மாநாடு நடைபெறுகிறது. இதில் சுமார் 125 நாடுகள் கலந்து கொள்கின்றன.

இந்நிலையில், இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி மாநாட்டில் பங்கேற்கமாட்டார் என்றும் மாறாக மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தலைமையின் கீழ் அதிகாரிகள் குழு கலந்து கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.