பொது பட்ஜெட் : பாதுகாப்புத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 சதவிகிதமாக உயர்த்தப்படும்
பாதுகாப்புத் துறையில் அந்நிய நேரடி முதலீடு 49 சதவிகிதமாக அதிகரிக்கப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.
சில துறைகளில் அந்நிய நேரடி முதலீடு ஊக்குவிக்கப்படும். என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார்.
அந்நிய முதலீட்டாளர்கள் இந்தியாவின் வளர்ச்சியில் நம்பிக்கை கொள்ள கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் முதலீட்டாளர்களுக்கு ஏற்றவாறு நிலையான வரி விதிப்பு முறையை கொண்டு வர முடிவு செய்யப்படும் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.