வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (12:41 IST)

இந்திரானி முகர்ஜியைப் போல், என் தாயும் பல ஆண்களுடன் செக்ஸ் உறவு வைத்துள்ளார்: 7 ஆம் வகுப்பு மாணவன்

இந்திரானி முகர்ஜியை போல், தனது தாயும் பல ஆண்களுடன் செக்ஸ் உறவு வைத்துள்ளார் என்று 7ஆம் வகுப்பு மாணவன் தன் பள்ளிக்கூட நோட்டில் எழுதி வைத்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
டெல்லியில், ஒரு தனியார் பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வரும் ஒரு மாணவனின் நோட்டை ஏதேச்சையாக பார்த்த ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்து போனார்கள்.
 
அதில் "நான் தவறான வழியில் பிறந்த குழந்தை. என் தாய், இந்திரானி முகர்ஜியைப் போல் பல ஆண்களுடன் செக்ஸ் உறவு வைத்திருக்கிறாள்" என்று எழுதி இருந்தது.
 
பதறிய பள்ளி நிர்வாகம் அந்த மாணவனின் பெற்றோர்களை அழைத்து விஷயத்தைக் கூறியது. மேலும், அந்த மாணவனுக்கு தகுந்த ஆலோசனை கொடுக்க ஏற்பாடு செய்திருக்கிறது.
 
வழக்கம்போல் இந்த விஷயத்தை வெளியே தெரியாமல் பார்த்துக்கொள்ளத் துடிக்கும் பள்ளி நிர்வாகத்திற்கு இதை எப்படி கையாள்வது என்றே தெரியவில்லை.
 
குழந்தைகளின் கல்விமுறையில் மாற்றம் கொண்டுவரப் போராடும், மூத்த வழக்கறிஞர் மற்றும் குழந்தைகள் உரிமை ஆர்வலர் அசோக் அகர்வால் கூறுகையில் "மீடியாக்கள் குழந்தைகளை எவ்வளவு பாதிக்கிறது என்பது பற்றி இங்கு யாருக்கும் சரியான கவலை இல்லை.
 
மீடியாக்கள் எந்த அளவுக்கு எல்லை தாண்டி செயல்படுகின்றனர் என்பதற்கு ஷீனாபோரா விஷயம் ஒன்றே போதுமான உதாரனம்" என்று கவலை தெரிவித்தார்.