வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வியாழன், 26 நவம்பர் 2015 (13:30 IST)

என் கணவர்தான் என்னை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் தள்ளினார் : ரேஷ்மி நாயர் வாக்குமூலம்

விபச்சார வழக்கில் கைது செய்யப்பட்ட கேரள மாடல் அழகி ரேஷ்மி நாயர், தனது கணவர் பசுபாலன்தான் தன்னை கட்டாயப்படுத்தி விபச்சாரத்தில் ஈடுபடுத்தினார் என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார்.


 

 
கேரளாவில் ஆன்லைன் மூலம் விபச்சாரம் நடத்தியதாக கூறி, கிஸ் ஆப் லவ் பிரச்சார ஒருங்கிணைப்பாளர் ராகுல் பசுபாலன் மற்றும் அவரது மனைவி ரஷ்மி ராயர் ஆகியோர் சமீபத்தில் கைது செய்யப்படனர்.
 
இதையடுத்து, ரேஷ்மி நாயர் போலிசாரிடம் கொடுத்த வாக்குமூலத்தில்  “எனது கணவர் பசுபாலன்தான் என்னுடைய நிர்வாணப் படங்களை இணையதளத்தில் பதிவுசெய்தார். அதை வைத்து பல பெரும்புள்ளிகளை வளைக்க அவர் திட்டமிட்டார். அவரின் செயல்பாடுகள் மீது அவரின் பெற்றோருக்கு ஏற்கனவே சந்தேகம் இருந்தது” என்று கூறியுள்ளார்.