வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 4 செப்டம்பர் 2015 (19:53 IST)

எம்.எம். பஷீர் ராமர் பற்றி எழுதிய முஸ்லிம் எழுத்தாளருக்கு மிரட்டல்

தென்னிந்திய மாநிலமான கேரளாவில் முஸ்லிம் எழுத்தாளர் ஒருவர், இந்து வலதுசாரி செயற்பாட்டாளர்களிடமிருந்து வந்த மிரட்டலை அடுத்து பத்திரிகை ஒன்றுக்கு கட்டுரை எழுதுவதை நிறுத்த நேரிட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இலக்கிய விமர்சகரும் முன்னாள் பேராசிரியருமான எம்.எம். பஷீர், ராமாயணத்தை மையப்படுத்தி இந்துக் கடவுளான ராமரைப் பற்றிய தொடர் கட்டுரைகளை எழுதி வந்துள்ளார்.
 
தான் ஒரு முஸ்லிம் என்பதால் இந்தக் கட்டுரையை எழுதுவதற்கு உரிமை இல்லை என்று வலதுசாரி குழுக்களிடமிருந்து வந்த கோரிக்கைகளை அடுத்து, அதனை தொடர்ந்தும் எழுதுவதை நிறுத்தியுள்ளதாக பஷீர் கூறியுள்ளார்.
 
இந்தியாவின் முன்னணி எழுத்தாளர்கள் பலர் இது தொடர்பில் கவலை வெளியிட்டுள்ளனர்.
 
மத சகிப்புத் தன்மை குறைந்து வருவதையே இது காட்டுவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.