1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: புதன், 20 ஆகஸ்ட் 2014 (18:01 IST)

பல ஆண்களுடன் பழகிய மகளை கொலை செய்து நாடகமாடிய பெற்றோர்

பல ஆண் நண்பர்களுடன் பழகிய மகளுக்கு உணவில் தூக்கமாத்திரை கலந்து கொடுத்து கொலை செய்து விட்டு தற்கொலை நாடகமாடிய தாய்–தந்தை உள்பட 3 பேர் கைது செய்யபட்டு உள்ளனர்.
 
இந்த கொடூர கொலையின் விவரம் வருமாறு:–
 
 
கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் அரிசிகெரே தாலுகா கொரடள்ளி கிராமத்தை சேர்ந்தவர் லோகேஷ். இவருடைய மனைவி கவிதா. இந்த தம்பதியின் மகள் காவியா(வயது 20). இந்த நிலையில், காவியா கடந்த ஞயிற்றுக்கிழமை அவரது வீட்டின் அருகே உள்ள மரத்தில் தூக்க்கில் பிணமாக தொங்கினார்.
 
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் சம்பவம் குறித்து ஜவகல் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் விரைந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் காவியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஜவஹலில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
மேலும் இதுகுறித்து ஜவஹல் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில், மருத்துவமனையில் காவியாவின் உடலை பிரேத பரிசோதனை செய்த மருத்துவர் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்யவில்லை. அவர் தூக்க மாத்திரை சாப்பிட்டதால் இறந்து உள்ளார் என்று தெரிவித்தார்.
 
இதனால் காவியாவின் சாவு கொலையா? அல்லது தற்கொலையா? என்று காவல்துறையினர் சந்தேகம் எழுந்தது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் முதற்கட்டமாக காவியாவின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினார்கள்.
 
விசாரணையில், ‘‘காவியா கொரடள்ளி கிராமத்தில் உள்ள அவளது ஆண் நண்பர்களுடன் அதிகமாக பேசி பழகி வந்தார். இது எங்களுக்கு பிடிக்கவில்லை. இதனால் நாங்கள் அவரை ஆண் நண்பர்களுடன் பேசி பழக கூடாது என்று கண்டித்தோம்.
 
ஆனால் அவள் எங்களின் பேச்சை கேட்காமல் தொடர்ந்து ஆண் நண்பர்களுடன் பேசி பழகி வந்தார். இதனால் ஆத்திரமடைந்த நாங்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அவள் சாப்பிடும் உணவில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து கொலை செய்தோம். பின்னர் காவியாவின் சித்தப்பா அமுர்தேசாவிற்கு நடந்த சம்பவம் குறித்து தெரிவித்தோம். இதையடுத்து அவர் காவியாவை இரவு நேரத்தில் வீட்டில் இருந்து தூக்கி கொண்டுபோய் மரத்தில் தூக்கில் தொங்கவிட்டார்’’ என்றனர்.
 
 
இதையடுத்து ஜவஹல் காவல்துறையினர் காவியாவை கொலை செய்துவிட்டு நாடகமாடியதாக அவளது தந்தை லோகேஷ், தாய் கவிதாவையும், சாட்சியை அழிக்க முயன்றதாக லோகேசின் தம்பி அமுர்தேசாவையும் கைது செய்தனர். இந்த சம்பவம் அரிசிக்கெரே பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.