வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: வெள்ளி, 17 ஜூலை 2015 (18:34 IST)

நடிகைக்கு ஆபாச வீடியோ அனுப்பிய சின்னத்திரை நடிகர் கைது!

நடிகைக்கு செல்போன் மூலமாக ஆபாச வீடியோ அனுப்பி தொல்லை கொடுத்த மகாராஷ்டிர மாநில சின்னத்திரை நடிகர் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
மராத்தி மொழி சின்னத்திரை தொடர்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் சாய் பல்லால். இவர், 58 வயதான  சக நடிகைக்கு கடந்த 4 நாட்களாகவே செல்போனில் ஆபாச வீடியோ அனுப்பி, தொல்லை கொடுத்து வந்தார். 'வாட்ஸ்ஆப்' மூலமாக ஆபாச படங்களை அனுப்பியும், ஆபாசமான எஸ்.எம்.எஸ்.களையும் அனுப்பியும் வந்துள்ளார்.
 
இதனால் அதிர்ச்சியடைந்த அந்த நடிகை, எந்தப் பதிலும் சொல்லாமல் அமைதி காத்து வந்துள்ளார். பின்னர் நடிகர் சாய் பல்லால், நடிகைக்கு போன் செய்து ஆபாசமாகப் பேசினார். பொறுமையிழந்த அந்த நடிகை, சின்னத்திரை நடிகர் சங்கத்தில் புகார் அளித்தார்.
 
இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கும்படி அவர்கள் ஆலோசனை கூறினர். இதையடுத்து, அந்த நடிகை, மும்பை, போரிவிலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனடியாக, சாய் பல்லாவை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் மகாராஷ்டிரா சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.