வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By caston
Last Modified: புதன், 2 செப்டம்பர் 2015 (12:18 IST)

சர்ச்சை பெண் சாமியார் ராதே மீது மீண்டும் புதிய எப்.ஐ.ஆர் பதிவு

சர்ச்சை பெண் சாமியார் ராதே மா மீது தொலைக்காட்சி நடிகை டாலி பிந்தரா அளித்த புகாரை அடுத்து மும்பை காவல் நிலையத்தில் புதிதாக நேற்று எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. இதன் மூலம் ராதே மா மேலும் ஓர் புதிய நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறார்.

தொலைக்காட்சி நடிகை மற்றும் முன்னாள் பிக் பாஸ் போட்டியாளருமாகிய டாலி பிந்தர மும்பை போரிவலி காவல் நிலையத்தில் அளித்த புகாரில் தொல்லை, மிரட்டல், பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாலுணர்வை தூண்டுதல் போன்ற  குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார்.

ராதே மா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு எதிராக இதுவரை 12 க்கும் அதிகமாக எப்.ஐ.ஆர் கள் பதிவு  செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன்பு டாலி பிந்த்ர ராதே மா  தன்னிடமும்  தனது குடும்பத்தினரிடமும் அநாகரிகமாக நடந்து கொள்கிறார் என  குற்றம் சாட்டியிருந்தார். மேலும் ஆண் பக்த்தர்களிடம் நெருக்கமாக இருக்க தன்னை வற்புறுத்தினார் எனவும் டாலி பிந்த்ரா கூறினார்.

டாலி பிந்த்ராவின் புகாரின் அடிப்படையில் ராதே மா, சஞ்ஜீவ் குப்தா, தல்லி பாபா, புபேந்த்ர மற்றும் பலர் மீது குற்ற பிரிவு 294,  354, 506(2), 109 12 B ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என காவல்துறை கூடுதல் கமிஷ்னர் ஃபதே சிங்  பாட்டீல் கூறினார்.

இந்த புகாரின் அடிப்படையில் ராதே மாவுக்கு சம்மன் அனுப்பப்படும் என காவல் துறை மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

முன்னதாக வரதட்சணை கொடுமை வழக்கில் ராதே மா மீது மும்பை கன்டிவாலி காவல் நிலையம் எப்.ஐ.ஆர் பதிவு செய்தது.  இந்த வழக்கிலிருந்தது மும்பை உயர் நீதிமன்றம் அவருக்கு ஜாமின் வழங்கியிருந்தது. இந்நிலையில் இந்திய  குடியரசு கட்சி ராதே மாவுக்கு எதிராக வெள்ளி கிழமை ஆர்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது.