வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: செவ்வாய், 25 ஏப்ரல் 2017 (14:27 IST)

பெற்ற தாயை கதற கதற.....: கேரளாவில் தொடரும் அவலம்!

பெற்ற தாயை கதற கதற.....: கேரளாவில் தொடரும் அவலம்!

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் பெற்ற தாயை மகன் கதற கதற பலாத்காரம் செய்த மிகவும் கொடூரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. இதனையடுத்து அந்த நபர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


 
 
25 வயதான பிரசாந்துக்கு திருமணமாகி மூன்று வயதில் ஒரு குழந்தை உள்ளது. ஆனால் பிரசாந்த் குடிப்பழக்கத்துக்கு அடிமையாகி இருந்ததால் அவரது மனைவி அவரை விட்டு பிரிந்து சென்றுவிட்டார்.
 
இந்நிலையில் கடந்த மார்ச் 24-ஆம் தேதி பிரசாந்த் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தனியாக இருந்த தனது 45 வயதான தாயின் வாயை பொத்தி அவரை பலவந்தமாக பலாத்காரம் செய்துள்ளார். இதனை வெளியில் சொன்னால் அவமானம் என்பதால் இது குறித்து யாரிடமும் சொல்லாமல் மனதில் வைத்து குமுறியிருக்கிறார் அந்த தாய்.
 
ஆனால் கடந்த புதன் கிழமையும் பிரசாந்த தன் தாயை பலாத்காரம் செய்ய முயன்றதால், அவரது தாய் பயத்தில் சத்தம் போட அருகில் வசிக்கும் பிரசாந்தின் பாட்டி அங்கு ஓடி வந்துள்ளார். அதன் பின்னர் பிரசாந்த் குறித்து அவரது பாட்டி போலீசில் புகார் அளித்தார்.
 
இந்த புகாரின் அடிப்படையில் பிரசாந்த் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கேராளாவில் இதற்கு முன்னர் 15 வயது சிறுமியை 13 வயது சிறுவன் ஒருவன் கர்ப்பமாக்கியது, பின்னர் 12 வயது சிறுவன் ஒருவன் தந்தை ஆனது என தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.