வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : செவ்வாய், 9 பிப்ரவரி 2016 (05:28 IST)

குரங்கை கைது செய்த போலீசார்

குரங்கை கைது செய்த போலீசார்

மும்பையில் உள்ள ஒரு குரங்கை போலீசார் கைது செய்த வினோதம் நடைபெற்றுள்ளது.
 

 
மும்பையின் மத்திய பகுதியில் கடந்த 6 மாதமாக ஒரு குரங்கு, அங்குள்ள பொது மக்கள் குடியிருக்கும் பகுதி, அலுவலகங்கள், பூங்கா மற்றும் உணவு விடுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உணவை திருடி திண்பது உள்ளிட்ட பெரும் அட்டகாசம் செய்துள்ளது.
 
இதனால், அந்த பகுதி மக்கள் அந்த குரங்குகளை விரட்ட பல்வேறு வழியில் முயற்சி மேற்கொண்டனர். ஆனால், அந்த குரங்கை எதுவும் செய்ய முடியவில்லை.
 
இந்நிலையில், அந்த குரங்குகளில் ஒன்று மட்டும் தனியாக வந்து போது, அதை குரங்கு பிடிக்கும் நபர் மூலம் லாவகமாகப் பிடித்த போலீசார், அதன்  கை, கால்களை கயிறால் கட்டி வைத்து, கூண்டு ஒன்றுக்குள் அடைத்தனர். பின்பு, அதனை வனப்பகுதியில் விடும் நடவடிக்கையை  மேற்கொண்டு வருகின்றனர்.