வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Dinesh
Last Updated : வியாழன், 13 அக்டோபர் 2016 (18:35 IST)

மோடியின் ராஜதந்திரம்!

பாகிஸ்தான் தீவிரவாதிகள் மீது சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியது இந்திய ராணுவம், இதில் 127 கோடி மக்களுக்கும் பங்கு உள்ளது என்று இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் தெரிவித்தார்.


 
 
மேலும், காங்கிரஸ் கட்சியை சாடும் விதமாக இதற்கு முன்னர் எந்த அரசியல் கட்சியும் இது போன்று சர்ஜிக்கல் ஸ்டிரைக் நடத்தியதில்லை என்றும், சர்ஜிக்கல் ஸ்டிரைக்கின் பெருமை முழுவதும் பிரதமர் மோடியையே சாரும் என்றும் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் மனோகர் பாரிக்கர் கூறி இருந்தார்.
 
இதற்கு பதிலளித்து பேசிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங், “மத்திய அரசின் தோல்வியை மறைக்க ராணுவத்தின் வெற்றியை தனது சாதனையாக மோடி பயன்படுத்துகிறார்” என்று குற்றம்சாட்டியுள்ளார்.