1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: சனி, 5 செப்டம்பர் 2015 (14:38 IST)

ஆங்கிலத்தில் கேட்ட கேள்விக்கு இந்தியில் பதிலளித்த மோடி

மாணவ - மாணவிகளுடன் காணொலி காட்சி மூலம் கலந்துரையாடிய பிரதமர் நரேந்திர மோடி, மாணவி ஒருவர் ஆங்கிலத்தில் கேள்வி கேட்க அவர் இந்தியில் பதிலளித்தார்.
 
ஆசிரியர் தினத்தையொட்டி மாணவ-மாணவிகளுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் கலந்துரையாடினார். இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடியுடன் தமிழகத்தை சேர்ந்த நெல்லை மாணவி விஷாலினி பிரதமர் மோடியுடன் கலந்துரையாடினார்.
 
அப்போது, நாட்டிற்கு எந்த வகையில் சேவை ஆற்ற வேண்டும் என்று ஆங்கிலத்தில் கேள்வி எழுப்பினார். அதற்கு பிரதமர் மோடி, “ராணுவத்தில் சேர்ந்தோ, அல்லது அரசியலுக்கு வந்தோதான் நாட்டுக்கு சேவையாற்ற வேண்டும் என்பது இல்லை. நாட்டிற்கு சேவை ஆற்ற பல வழிகள் உள்ளன.
 
வீட்டில் தேவையில்லாமல் செயல்படும் மின்சாதன பொருட்களை நிறுத்திவைத்து, மின்சாரத்தை மிச்சம் பிடிப்பது கூட நீங்கள் செய்யும் சேவைதான்” என்று இந்தி மொழியில் பதிலளித்தார். இதற்கு தமிழகத்தை சேர்ந்த சில அமைப்புகள் விமர்சித்து வருகின்றன.