வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 13 மார்ச் 2019 (14:59 IST)

ஏ.ஆர்.ரகுமான், ஷாருக்கான் ,தீபிகா படுகோனேவிடம் மோடி வேண்டுகோள்!!

வரும் தேர்தலில் வாக்காளர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த அரசியல் சினிமா விளையாட்டு போன்ற துறையில் உள்ள பிரபலங்களை பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக 4 வேண்டுகோளை வாக்காளர்கள் முன்வைப்பதாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதில் விவரங்களை முழுமையாக ஆராய்தல், தவறாது வாக்களித்தல், குடும்பத்தினரை வாக்களிக்க ஊக்குவித்தல் ஆகியவற்றை தெரிவித்துள்ளார்.
 
பல்வேறு அரசியல் கட்சிதலைவர்களும் வரும் தேர்தலில் அனைவரும் ஓட்டுப் போட வேண்டும் என்பதற்க்காக வாக்காளர்களை ஊக்குவிக்க மோடியிடம்கேட்டுக்கொண்டனர்.
இதனையடுத்து பலவேறு மாநில முதலமைச்சர்களிடமும் இந்தக் கோரிக்கையை அவர் முன்வைத்துள்ளார். அதேபோல நடிகர்கள் அமிதாப்பச்சன் சல்மான் கான், அமீர்கான், ஷாரூக் கான் மோகன்லால் நாகார்ஜூன் , ஏ.ஆர்,ரமான் , தீபிகா படுகோன் அனுஷ்கா சர்மா, மற்றூம் விளையாட்டு வீரர்களான தோனி, பிவி.சிந்துஆகியோரிடம்  வாக்காளர்களை ஊக்குவைக்குமாறு பிரதமர் கோடி கேட்டுக்கொண்டிருக்கிறார்.