வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: ஞாயிறு, 20 ஜனவரி 2019 (09:32 IST)

மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் மோடி ஹிட்லராகிவிடுவார்: அரவிந்த் கெஜ்ரிவால்

கடந்த 2014ஆம் ஆண்டு தேர்தலின்போது வீசிய மோடி அலையால் நாடு முழுவதும் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக தனித்து ஆட்சி அமைத்தது. ஆனால் கடந்த நான்கரை ஆண்டுகளில் பிரதமர் மோடி மீதும், பாஜக தலைவர்கள் மீதும் எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் அதிருப்தி அடைந்துள்ளதால் மீண்டும் ஆட்சியை பிடிப்பது சந்தேகமே என கூறப்படுகிறது.

இந்த நிலையில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒரே அணியில் இணைந்துள்ளது. நேற்று நடைபெற்ற கொல்கத்தா பொதுக்கூட்டம் இதனை உறுதி செய்துள்ளது.

இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், 2019ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று பாஜக ஆட்சிக்கு வந்தால் பிரதமர் நரேந்திர மோடியும் பாஜக தலைவர் அமித்ஷாவும் ஹிட்லருக்கு நிகராக மாறிவிடுவார்கள்' என்று கூறியுள்ளார்