லூதியானாவில் பள்ளி மாணவி பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் காணாமல் போன பள்ளி மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் கடந்த புதன்கிழமை அன்று பள்ளிக்கு சென்ற மாணவி திடீரென மாயமானார். காணாமல் போன பள்ளி மாணவியை கண்டுபிடித்து தரக்கோரி அவரது உறவினர்கள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தநிலையில் அங்குள்ள கால்வாய் ஒன்றில் காணாமல் போன மாணவியின் உடல் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற போலீசார் மாணவியின் உடலை மீட்டு பிரேச பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பிரேத பரிசோதனையின் இறுதியில் கடத்தப்பட்ட மாணவி பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்பட்டிருப்பதும், பின்னர் கூர்மையான ஆயுதங்களால் அவள் கொலை செய்யப்பட்டிருப்பதும் உறுதி செய்யப்பட்டது. பள்ளி மாணவியை பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தி கொலை செய்த மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.