வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: திங்கள், 14 மார்ச் 2016 (14:51 IST)

7 வயது சிறுமியின் உடல் சாக்குமூட்டையில் கண்டெடுப்பு

7 வயது சிறுமியின் உடல் சாக்குமூட்டையில் கண்டெடுப்பு

காஸியாபாத்தில் லோனி பகுதியில் காஞ்சன் பார்க் அருகே வீட்டின் வெளியே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி கடந்த சனிக்கிழமை காணாமல் போனாள். அந்த சிறுமி நேற்று இரவு சாக்குப் பையின் உள்ளே பிணமாக கண்டெடுக்கப்பட்டார்.


 
 
சிறுமியின் வீட்டிலிருந்து 50 மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு காலியான பகுதியில் ஞாயிறு இரவு 10.30 மணியளவில் சிறுமியின் உடலை காவல் துறையினர் கண்டெடுத்தனர். ஆனால் இது வரைக்கு யாரையும் இது தொடர்பாக காவல் துறையினர் கைது செய்யவில்லை.
 
சிறுமி கண்டெடுக்கப்பட்ட பகுதியில் பல ஆடை தயாரிக்கும் குழு உள்ளன. கண்டெடுக்கப்பட்ட சிறுமியின் தொண்டை துணியால் நெரிக்கப்பட்டு கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
உள்ளூரில் உள்ளவர்களே சிறுமியை உள்நோக்கத்துடன் கடத்தியிருக்கலாம் என காவல் துறையினர் சந்தேகிக்கின்றனர். குடும்பத்தினர் சிறுமியை தேட ஆரம்பித்ததும் அவர்கள் பயத்தில் சிறுமியின் கழுத்தை நெரித்து கொன்றிருக்கலாம் என கூறப்படுகிறது.
 
பிரேத பரிசோதனையில் பாதிக்கப்பட்ட சிறுமி பாலியல் தாக்குதலுக்கு ஆளாகி இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமி காணாமல் போன நேரத்தில் அருகில் உள்ள ஆடை தயாரிக்கும் குழுக்களில் யாராவது விடுப்பில் இருந்தார்களா என காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.