1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Updated : செவ்வாய், 5 ஜனவரி 2016 (18:03 IST)

பள்ளி கழிப்பறையில் குழந்தை பெற்ற ஒன்பதாம் வகுப்பு மாணவி : ஓட்டல் அதிபர் கைது

பள்ளி கழிப்பறையில் குழந்தை பெற்ற மாணவி

ஒன்பதாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவி, கழிவறையில் குழந்தை பெற்றுக் கொண்ட விவகாரம் ஆந்திராவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஆந்திராவின் தலைநகரான ஹைதராபாத் மாவட்டத்தில் உள்ள மதுப்பூர் எனும் இடத்தில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவி ஒருத்தி, கடந்த நவம்பர் மாதம், பள்ளி கழிப்பறையில் குழந்தையை பெற்றெடுத்தாள். தற்போது அந்த மாணவி, குழந்தையுடன் யூசுப்குடா பகுதியில் உள்ள அரசு காப்பகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 
 
அந்த சிறுமியிடம் போலிசார் நடத்திய விசாரணையில், கல்கத்தாவில் இருந்து ஆந்திராவிற்கு வந்து, மதுப்பூர் பகுதியில் ஒட்டல் நடத்திக் கொண்டிருந்த திலீப் சர்க்கார்(39) என்பவருடன் ஏற்பட்ட தொடர்பால்தான், தனக்கு குழந்தை பிறந்துள்ளது என்று கூறினாள். இதனையடுத்து போலிசார் அவரை தேடி வந்தார்கள். இதையடுத்து அவர் தலைமறைவாகி விட்டார்.
 
அவர் மேற்கு வங்களம் மாநிலத்திற்கு தப்பி சென்றிருந்த அவர், போலிசாரின் தீவிர தேடுதல் வேட்டை சற்று தணிந்த பின்னர் ஹைதராபாத்திற்கு திரும்பி வந்தார். இந்த தகவல் தெரிந்து, நேற்று இரவு போலிசார் அவரை கைது செய்தனர். 
 
ஆனால், தான் அந்த சிறுமியை கட்டாயப்படுத்தி கற்பழிக்க வில்லையென்றும், தன்னிடம் பணம் வாங்கிக் கொண்டு அந்த சிறுமி, விரும்பியே தன்னுடன் உறவு வைத்துக் கொண்டாள் என்றும் அவர் போலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். அதனால் அந்த வழக்கு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.