வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: வியாழன், 20 அக்டோபர் 2016 (19:37 IST)

வாங்கடா.. நானும் பெரிய ரவுடிதான்... மிரட்டும் மார்கண்டேய கட்ஜூ

வாங்கடா.. நானும் பெரிய ரவுடிதான்... மிரட்டும் மார்கண்டேய கட்ஜூ

சமீபகாலமாக, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ அதிரடியான கருத்துகளை கூறி வருகிறார். அந்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன.


 

 
தமிழக முதல்வர் ஜெயலலிதா முதல் மறைந்த பால் தாக்கரே வரை ஒருவரையும் அவர் விட்டு வைக்கவில்லை. 
 
சமீபத்தில் ஒடிசாவில் வசிப்பவர்களை கேவலமாக கிண்டல் செய்தார். அதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. அவருக்கு எதிரான பல்வேறு கருத்துகளை பதிவு செய்தார்கள் ஒடிசாவை சேர்ந்த நெட்டிசன்கள். தற்போது, மகாராஷ்டிரா பக்கம் தனது பார்வையை திருப்பியுள்ளார். 
 
பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த நடிகர்களை, பாலிவுட் படங்களில் நடிக்க அனுமதிக்கக் கூடாது என்று மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது. இதற்கு, மார்க்கண்டேய கட்ஜூ தனது டிவிட்டர் பக்கத்தில் எதிர்ப்பு தெரிவித்து கருத்து தெரிவித்துள்ளார்.
 
அதாவது, “மகாராஷ்டிர நவ நிர்மான் கட்சியினர் எல்லாம் அரபிக் கடலின் உப்புத் தண்ணீரைக் குடித்து வளர்ந்தவர்கள். நான் அலகாபாத் ரவுடி, மேலும், நான் திருவேணி சங்கம் தண்ணீரை குடித்து வளர்ந்தவன்” என்று ஒரு டிவிட்டிலும், 


 

 
உங்கள் தைரியத்தை, அந்த நடிகர்களிடம் காட்டுவதற்கு பதிலாக, என்னிடம் காட்டுங்கள். யார் பெரிய ரவுடி என்பதை உலகம் பார்க்கட்டும்” என்று மற்றொரு டிவிட்டிலும் குறிப்பிட்டுள்ளார்.


 

 
அவரின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.