செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: திங்கள், 28 ஜூலை 2014 (15:44 IST)

மம்தா சுற்றுப்பயணம் செய்யும் பகுதிகளில் மாவோயிஸ்ட் நோட்டீஸ்களால் பரபரப்பு

மம்தா பயணம் செய்யும் மாவட்டத்தில் மாவோயிஸ்ட் தியாகிகள் வாரம் கொண்டாடப்படும் என்ற நோட்டீஸ்களால் வன்முறை நடக்கும் என்ற பரபரப்பு நிலவுகிறது.
 
மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி புருலியா மாவட்டத்தில் வருகிற 30 ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். இந்த மாவட்டத்தில் உள்ள பந்த்வான் பகுதியில் மாவோயிஸ்டுகள் 50க்கும் மேற்பட்ட நோட்டீஸ்களை ஒட்டியுள்ளனர். அதில் தியாகிகள் வாரம் கடைபிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இந்த நோட்டீஸ்கள் பந்த்வானில் உள்ள சிருடி பகுதியில் காணப்பட்டதாக மாவட்ட நீதிபதி சுதிர் குமார் தெரிவித்துள்ளார். மம்தா பானர்ஜி சுற்றுப்பயணம் செய்யும் நேரத்தில், மாவோயிஸ்டுகள் தியாகிகள் வாரம் கொண்டாடுவதால் வன்முறை நடக்கும் என்ற அச்சம் நிலவுவதாகத் தெரிகிறது.
 
இதனால் அம்மாவட்டம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. ஜார்க்கண்ட் மாநிலத்தை ஒட்டியுள்ள சோதனைச்சாவடியிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் மாவோயிஸ்ட் நடமாட்டம் உள்ளதா என்றும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது.