வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: வெள்ளி, 29 மே 2015 (02:17 IST)

தகுதி நீக்கம் செய்யப்பட்டனர் 3 சட்டமன்ற உறுப்பினர்கள் - இது மணிப்பூரில்

மணிப்பூரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூன்று சட்ட மன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர்.
 
மணிப்பூரில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில், சட்ட மன்ற உறுப்பினர்களாக  ஜோய்கிஷன், பிஸ்வஜித் சிங் மற்றும் குகோய் சிங் ஆகியோர் இருந்து வந்தனர்.
 
இந்நிலையில், இவர்கள் மூன்று பேரும், அக்கட்சியிலிருந்து விலகி, மணிப்பூர் மாநில திரிணாமுல் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தோற்றுவிக்கும் வகையில் ரகசிய முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
 
இதையடுத்து, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில், சட்ட மன்ற உறுப்பினர்களாக  ஜோய்கிஷன், பிஸ்வஜித் சிங் மற்றும் குகோய் சிங் ஆகியோர் மீது, கட்சி தாவல் தடை சட்டத்தின்படி, இம்மூன்று எம்.எல்.ஏக்களையும் தகுதி நீக்கம் செய்து மணிப்பூர் மாநில சட்டசபை சபாநாயகர் லோகேஸ்வர் சிங் உத்தரவிட்டு உள்ளார்.