1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Updated : சனி, 30 ஜூலை 2016 (15:25 IST)

இறந்த வாலிபர் தீ வைத்து எரிக்கும் போது எழுந்து வந்த அதிசயம்!

மத்தியப் பிரதேச மாநிலம் ரைசென் மாவட்டத்தை சேர்ந்த 23 வயதான சந்தீப் என்ற வாலிபர் பாம்பு கடித்து இறந்ததாக கருதி அவரை அடக்கம் செய்ய சென்றனர். அப்போது அவரது உடலில் தீ வைத்து எரிக்கும் போது அவர் உயிருடன் எழுந்து வந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


 
 
கடந்த சில தினங்களுக்கு முன்னர் சந்தீப் விறகு எடுப்பதற்காக அருகில் உள்ள காட்டிற்கு சென்ற போது அவரை பாம்பு கடித்தது. தன்னை பாம்பு கடித்ததை அவர் வீட்டில் உள்ளவர்களிடம் சொன்னார்.
 
வீட்டில் உள்ளவர்கள் அவரை ஒரு மந்திரவாதியிடம் கொண்டு சென்றனர். ஆனால் மந்திரவாதியின் மருத்துவம் பலிக்காமல் சந்தீப் இறந்து விட்டார். இதனால் அவரது உடலை எடுத்துக்கொண்டு சுடுகாட்டுக்கு சென்றனர்.
 
சுடுகாட்டில் சந்தீப்பின் உடலை எரிக்க தீமூட்டும் போது அவர் உயிருடன் எழுந்து சத்தமிட்டு அவரது நாக்கால் உடலை நக்கினார். அவரை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல், மீண்டும் மந்திரவாதியிடம் கொண்டு சென்றனர் அவரது குடும்பத்தினர்.
 
இந்நிலையில் இரண்டாம் முறையாக அங்கு கொண்டு போன பின்னரும் அவர் இறந்து விட்டார், பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.