வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 3 ஜூலை 2015 (17:52 IST)

நாய்க்கு ஆதார் அட்டை எடுத்த விநோத நபர் கைது

வீட்டில் உள்ள தனது நாய்க்கு இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் ஆதார் அட்டை விண்ணப்பித்து பெற்றவரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
 
மத்திய அரசு இந்திய குடிமகன் என்பதற்கும், சலுகைகள் பெறவும் ஆதார் அட்டைகளை வழங்கி வருகிறது. இதனால் அனைத்து மாநிலங்களிலும் வசிக்கும் பொதுமக்களுக்கும் ஆதார் அட்டை வழங்கும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றது.
 

 
இந்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலம் உம்ரியில் வசிக்கும் அசாம் கான் என்பவர் தனது வீட்டில் உள்ள நாய்க்கு ஆதார் அட்டை எடுத்து வைத்திருப்பதாக அங்குள்ள அதிகாரிகளுக்கும், காவல் துறையினருக்கு புகார்கள் வந்தன.
 
இது குறித்து ஆய்வு செய்தபோது, டாமி சிங் என்ற பெயரில் நாயின் பெயரை குறிப்பிட்டும், பிறந்த தேதி, பாலினம் உள்ளிட்ட தகவல்கள் குறிப்பிட்டும் அந்த ஆதார் அட்டையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, அசாம் கானை காவல் துறையினர் கைது செய்தனர். மேலும், ஆதார் அட்டையும் பறிமுதல் செய்யப்பட்டது.