வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 4 அக்டோபர் 2015 (17:07 IST)

மூன்றாவது நாளாக தொடரும் லாரி ஸ்டிரைக் : அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் ஆபத்து

மூன்றாவது நாளாக தொடரும் லாரி ஸ்டிரைக்கால், சரக்குகள் தேக்கமானதால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.


 
 
இந்தியாவில் உள்ள அனைத்து சுங்கச் சாவடிகளையும் முறைப்படுத்த வேண்டும். டீசல் விலை குறையும் போது, வரியையும் குறைக்க மத்தியமாநில அரசுகள் பரிந்துரை செய்ய வேண்டும் மற்றும் போக்குவரத்து வாகன வரியை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் உள்பட  கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் நாடு முழுவதும் அக்.1 ஆம் தேதி  முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியது.
 
இந்தப் போராட்டம் இன்று மூன்றாவது நாளாக தொடர்கிறது. இதனால் சர்க்குகளை பிற மாநிலங்களுக்கு எடுத்துச் செல்ல முடியாமல் தமிழகத்திலேயே தேங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. அதேபோல், மற்ற மாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு சரக்குகள் வராததால், அத்தியாவசியப் பொருட்களுக்கு, கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயரும் ஆபத்து  வரலாம் எனத் தெரிகிறது.
 
இதே நிலை தொடர்ந்தால், காய்கறி, தண்ணீர், பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை லாரியில் எடுத்துச் செல்ல முடியாத நிலை உருவாகியுள்ளது.
 
இந்நிலையில், மத்திய அரசு லாரி உரிமையாளர்களை இன்று பேச்சு வார்த்தைக்கு அழைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.