வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Modified: திங்கள், 5 அக்டோபர் 2015 (00:12 IST)

மோடிக்கு எதிராக டிவிட்டரில் லாலு கிளப்பிய புயல்

மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, ராஷ்டிரிய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் யாதவ் கிளப்பிய புயல் நாட்டையே அதிர வைத்துள்ளது.
 

 
அண்ணல் மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, ராஷ்டிரிய ஜனதாதள தலைவரும், பீகார் முன்னாள் முதலமைச்சருமான லாலு பிரசாத் யாதவ், தனது டிவிட்டர் பக்கத்தில், மகாத்மா காந்தியை வணங்கி மரியாதை செலுத்தினார். மேலும், நாட்டுக்காக விடுதலை பெற்றுத்தந்த தந்தை என பாராட்டும் தெரிவித்துள்ளார்.
 
இந்த நிலையில், அந்த பதிவில், மகாத்மா காந்தியை சுடுக்கொன்றது யார்? கோட்சே என்று இந்தியா முழுமைக்கும், ஏன், உலகம் முழுக்க தெரியும். ஆனால் கோட்சேவை  வழிபடுவது யார்? ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்கள்.
 
சரி, ஆர்.எஸ்.எஸ். சொல்வதுதான் வேதவாக்கு என செயல்படுவது யார்? பாஜக அந்த பாஜகவை இயக்குவது யார்? நரேந்திர மோடி. அப்படி என்றால், மகாத்மா காந்தியை கொன்ற கொலையாளி யார்? என அதிரடிபுதிராடியாக புயல் கிளப்பிவிட்டார்.

மோடியை மறைமுகமாகவும், நேரடியாகவும் தாக்குதல் நடத்திய லாலு மீது கடும் கோபத்தில் உள்ள, பாஜகவும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் தகுந்த பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது.