வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: புதன், 1 ஜூலை 2015 (16:43 IST)

சோனியா மூலம் பிரச்சனைகளை தீர்ப்பதாக வருண் காந்தி கூறியதாக லலித் மோடி ட்வீட்

பாஜக எம்.பி. வருண் காந்தி சில ஆண்டுகளுக்கு முன், லண்டனில் உள்ள எனது இல்லத்தில் என்னை சந்தித்தார். அப்போது, சோனியா காந்தியிடம் கூறி அனைத்து பிரச்சனைகளுக்கும் முற்றுப்புள்ளி வைப்பதாக அவர் உறுதியளித்தார் என்று ஐபிஎல் முன்னாள் ஆணையர் லலித் மோடி இன்று கூறியுள்ளார்.
 
இத்தாலியில் உள்ள சோனியா காந்தியின் சகோதரியை தான் சந்திக்க வேண்டும் எனவும் அவர் நிர்பந்தித்தார் என்றும், எங்களின் சந்திப்புக்கு உலகப் புகழ்பெற்ற ஜோதிடர் ஒருவரே சாட்சி எனவும் ட்விட்டர் பக்கத்தில் லலித் மோடி கூறியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் புதிய சர்ச்சையை எழுப்பியுள்ளது.