வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: சனி, 30 ஜூலை 2016 (10:50 IST)

கேரளாவில் மாணவர்களுடன் கபாலி படம் பார்த்த ஆட்சியர்!

கேரளாவில் பத்தனம் திட்டா மாவட்ட ஆட்சியர் ஹரிகிஷோர் நேற்று முன்தினம் பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த கபாலி திரைப்படத்தை பார்த்தார். இவர்களுடன் பத்தினம் திட்டா நகரசபை தலைவர் ரெஜினி பிரதீப், துணை தலைவர் ஜேக்கப் மற்றும் கவுன்சிலர்களுடன் படம் பார்த்தனர்.


 
 
கடந்த 22-ஆம் தேதி பெரும் எதிர்பார்ப்புடன் உலகமெங்கும் வெளியான கபாலி திரைப்படம் வசூலில் சாதனை புரிந்து வருகிறது. இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்தாலும், ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு வரவேற்பு குறையவில்லை.
 
இந்நிலையில் இரண்டு தினங்களுக்கு முன்னர் பத்தனம் திட்டா மாவட்ட ஆட்சியர் ஹரிகிஷோர் பள்ளி மாணவர்கள் விடுதி ஒன்றிற்கு சென்றபோது மாணவர்கள் பலரும் ஆட்சியரிடம் கபாலி படத்தை பார்க்க விருப்பம் தெரிவித்தனர்.
 
இதனையடுத்து ஆட்சியர் ஹரிகிஷோர் மாணவர்கள் கபாலி படம் பார்க்க ஏற்பாடு செய்தார். நேற்று முன்தினம் விடுதி மாணவர்கள் அனைவரையும் அருகில் உள்ள தியேட்டருக்கு அழைத்து சென்று அவர்களுடன் கபாலி திரைப்படத்தை பார்த்தால் ஆட்சியர் ஹரிகிஷோர்.