வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 28 பிப்ரவரி 2016 (12:48 IST)

கேரள முதல்வர் உம்மன் சாண்டி சென்ற கார் விபத்து

கேரள முதல்வர் உம்மன் சாண்டி சென்ற கார் விபத்துக்குள்ளான சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

 
ஞாயிற்றுக்கிழமைகளில் உம்மன் சாண்டி தந்து சொந்த கிராமத்திற்கு சென்று மக்களின் குறைகளை கேட்பது வழக்கம். அவ்வாறு அவர் கோழிக்கோடில் ஜனாதிபதி பங்கேற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, அங்கிருந்து கோட்டயம் மாவட்டத்தில் உள்ள புதுப்பள்ளிக்கு நேற்றிரவு காரில் சென்று கொண்டிருந்தார்.
 
இன்று அதிகாலை 3 மணியளவில் வைக்கம்-எட்டுமன்னூர் சாலை வழியாக அவரின் கார் வந்து கொண்டிருந்த போது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையின் ஒரத்திலிருந்த கால்வாயில் இறங்கியது.
 
ஆனாலும், உம்மன் சாண்டி சீட் பெல்ட் அணிந்திருந்ததால், அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த விபத்தில் அவருடைய பாதுகாவலர் காயமடைந்தார். அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.