வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Modified: திங்கள், 22 டிசம்பர் 2014 (08:38 IST)

கர்நாடகாவில் 7 வயது சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த 6ஆம் வகுப்பு மாணவர்கள்

கர்நாடகா மாநிலத்தில் 7 வயது சிறுமியை 6ஆம் வகுப்பு படிக்கும் 4 சிறுவர்கள் சேர்ந்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
 
7 வயது சிறுமியை 6ஆம் வகுப்பு மாணவர்கள், டிசம்பர் 19 ஆம் தேதி, பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்நிலையில் பலாத்காரம் செய்த சிறுவர்களை கைது செய்த காவல்துறையினர், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பிரிவில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
பாதிக்கப்பட்ட சிறுமி தனது பாட்டியின் வீட்டில் தங்கிப்படிப்பதாகவும், சிறுமியின் பெற்றோர் மும்பையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
 
கர்நாடகா மாநிலத்தில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்படும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.