வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 22 ஜனவரி 2019 (21:39 IST)

சபரிமலைக்கு சென்று வந்த பெண்ணை வீட்டை விட்டு விரட்டிய உறவினர்கள்

சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்த நிலையில் இந்த உத்தரவை சரியாக புரிந்து கொள்ளாமல் வீம்புக்கு சில பெண்கள் சபரிமலைக்கு சென்றனர். உண்மையாக விரதமிருந்து பக்தியுடன் பெண்கள் சபரிமலை ஐயப்பனை வழிபட வந்தால் வரவேற்போம் என ஐயப்ப பக்தர்கள் கூறியுள்ள நிலையில் உரிமையை நிலை நாட்டுவதற்காக வீம்புக்கு வந்த பெண்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

இந்த நிலையில் கேரள மாநிலத்தின் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த கனகதுர்க்கா என்பவர் சமீபத்தில் ஐயப்பனை தரிசனம் செய்தார். இதனால் அவரது வீட்டின் அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் கனகதுர்க்கா மீது கடும் கோபம் கொண்டனர். அவர் மீதிருந்த கோபத்தில் அவரது மாமியாரை ஒருசிலர் தாக்கியதாகவும், இதனால் காயமடைந்த மாமியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது

இதனால் கணவர் உள்பட உறவினர்களின் ஒட்டுமொத்த கோபமும் கனக துர்க்கா மீது திரும்ப அனைவரும் சேர்ந்து அவரை வீட்டை விட்டு வெளியேற்றி உள்ளனர். தற்போது கனகதுர்க்கா மகளிர் விடுதி ஒன்றில் தங்கியிருப்பதாகவும், தன்னை வீட்டு விட்டு வெளியேற்றியது குறித்து அவர் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் மனு அளித்துள்ளதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.