செவ்வாய், 19 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (11:33 IST)

நீதி வென்றுள்ளது: பி.வி. ஆச்சார்யா மகிழ்ச்சி!!

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட நான்கு பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீடு மனு மீதான தீர்ப்பு இன்று வெளியாகியது.


 
 
இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக கருதப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணடைந்துவிட்டதால் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மீதமுள்ள 3 பேரும் குற்றவாளிகள் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
 
இந்நிலையில், உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு சரியானது என்றும் நீதி வென்றுள்ளது என்றும் மூத்த வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா தெரிவித்துள்ளார்.
 
செய்தியாளர்களை சந்தித்த ஆச்சார்யா, நீதித்துறை சுதந்திரமானது, அரசியல் சார்பற்றது. இன்று வழங்கப்பட்டுள்ள தீர்ப்பால், நீதிபதிகள் நீதியை நிலைநாட்டிவிட்டனர் என மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.