வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 11 ஏப்ரல் 2017 (04:35 IST)

ஆர்.கே.நகர் போலவே இன்னொரு தொகுதி தேர்தலும் ஒத்திவைப்பு: தேர்தல் ஆணையம் அதிரடி

சமீபத்தில் சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை அதிகளவிலான பணப்பட்டுவாடா காரணமாக ஒத்திவைப்பதாக தேர்தல் ஆணையம் அதிரடி முடிவு ஒன்றை எடுத்தது. இந்த முடிவை ஒருசில அரசியல்வாதிகள் விமர்சித்தும், பலர் பாராட்டியும் வருகின்றனர்.



 


இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் மக்களவை தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலையும் தேர்தல் ஆணையம் ஒத்திவைக்க அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

நேற்று இந்த இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் வாக்குப்பதிவு தொடங்கியது முதலே போராட்டக்காரர்கள் ஆங்காங்கே கலவரத்தில் ஈடுபட்டு வந்ததால் தேர்தல் ஆணையம் அதிரடியாக தேர்தலை ரத்து செய்துள்ளது.

இந்த கலவரத்தில் போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்பு படையினர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் 7 பேர் உயிரிழந்ததாகவும் இந்த கலவரம் காரணமாக அந்த தொகுதியில் வெறும் 6.5 சதவீத வாக்குகள் மட்டுமே பதிவாகியதாகவும் தகவல் வந்தததால் இந்த தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டது