1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: திங்கள், 8 பிப்ரவரி 2016 (12:51 IST)

கணவர் மற்றும் மாமனாரால் பலாத்காரம் செய்யப்பட்ட 15 வயது இளம்பெண் மீட்பு

1 லட்சத்திற்கு விற்கப்பட்டு, ஒன்பது மாதங்களாக சித்திரவதை மற்றும் பலாத்காரம் செய்யப்பட்டு வந்த ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த 15 வயது இளம்பெண் ஒருவரை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.


 
 
ஹரியான குடும்பம் ஒன்று மணமகள் வியாபரம் என்ற பணம் கொழிக்கும் தொழிலை செய்து வருகிறது. இவர்கள் வடமேற்கு மாநிலங்களுக்கு இளம் பெண்களை விற்கும் தொழிலை செய்து வருகின்றனர். பாலின விகிதாச்சாரத்தை சமன் செய்வதற்காக இதை செய்வதாக பொய்யான காரணங்கள் இவர்களால் கூறப்படுகிறது.
 
தற்போது மீட்கப்பட்ட அந்த 15 வயது இளம்பெண் ரூபாய் 1 லட்சத்திற்கு விற்கப்பட்டு, 30 வயதுள்ள ஒருவரை திருமணம் செய்துகொள்ள வற்புறுத்தப்பட்டுள்ளார்.
 
இந்த ஒன்பது மாதமும் அவளது கணவர் மற்றும் மாமனார் இருவரும் தினமும் இரவு குடித்து விட்டு வந்து அவளை பெல்ட் மற்றும் ஷூவால் தாக்குவதும், பலாத்காரம் செய்வதும் வழக்கமாக நடக்கும் என பாதிக்கப்பட்ட பெண் கூறினார்.
 
மேலும் கூறிய அவர், தினமும் காலை நான் எழும்போது உடலில் காயங்களுடனே எழும்புவேன். நான் என் தாயிடம் திரும்பி செல்கிறேன் என அவர்களிடம் கெஞ்சுவேன் ஆனால் அவர்கள் என் துயரத்தை பார்த்து மகிழ்ச்சியடைவார்கள் என்றார்.