செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: சனி, 4 ஜூலை 2015 (18:40 IST)

வீட்டில் கழிப்பறை வசதியில்லாததால் கல்லூரி மாணவி குஷ்பு தற்கொலை!

வீட்டில் கழிப்பறை கட்டி தராததால் மனமுடைந்த கல்லூரி மாணவி குஷ்பு குமாரி, தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
 

 
ஜார்க்கண்ட் மாநிலத்தின் தும்கா பகுதியை சேர்ந்தவர் குஷ்பு குமாரி. 17 வயதான இவர், ஜார்க்கண்ட் மாநில கல்லூரியில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவரின் வீட்டில் கழிப்பறை இல்லாததால், இயற்கை உபாதைகளுக்கு வெட்ட வெளியைத் தேடி செல்லவோ அல்லது நெடுந்தூரம் இருக்கும் அவரின்  பாட்டி வீட்டுக்கோ செல்ல வேண்டியிருந்தது.
 
இது அவருக்கு மிகவும் சங்கடமாக இருந்த நிலையில் தனது பெற்றோரிடம் வீட்டில் கழிப்பறை அமைத்து தர வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார்.
 
ஆனால் அவர்கள் அதனை கண்டுகொள்ளவில்லை எனத்தெரிகிறது. இதனை மனமுடைந்த குஷ்பு, தனது வீட்டில் யாருமில்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். குஷ்புவின் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
குஷ்புவின் திருமணத்துக்காக பணம் சேர்த்து வந்ததாகவும், கழிப்பறை கட்டினால் பணம் செலவாகிவிடும் என்ற காரணத்தால் குஷ்புவின் கோரிக்கையை நிறைவேற்றவில்லை என்றும் அவரின் தந்தை ஸ்ரீபதி யாதவ் கூறியுள்ளார்.