வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: புதன், 7 செப்டம்பர் 2016 (08:07 IST)

பிறந்த குழந்தையை 3-வது மாடியில் இருந்து தூக்கி வீசிய பெண்!

பிறந்த குழந்தையை 3-வது மாடியில் இருந்து தூக்கி வீசிய பெண்!

உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் பிறந்து 18 நாட்களேயான பச்சிளம் குழந்தையை மருத்துவமனையின் 3-வது மாடியிலிருந்து பெண் ஒருவர் தூக்கி வீசும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 
 
30 அடி உயரத்தில் இருந்து குழந்தையை அதன் அத்தையே கீழே தூக்கி வீசும் காட்சி மருத்துவமனையில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது.


நன்றி: Daily Mirror and ANI
 
கொடூர மனம் கொண்ட அந்த பெண்ணால் தூக்கி வீசப்பட்ட அந்த குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிரிழக்கவில்லை, மூன்றாவது மாடியின் பால்கனியில் இருந்து வீசப்பட்ட குழந்தை கீழே உள்ள கட்டிடத்தின் இரும்பு கிரிலில் சிக்கி பலத்த காயத்துடன் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.