வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: செவ்வாய், 21 ஏப்ரல் 2015 (18:16 IST)

13 வயது சிறுவனை 5 நாட்கள் சங்கிலியால் கட்டிப்போட்ட ஆந்திர காவல்துறை

ஆந்திர காவல்துறையினர் 13 வயது சிறுவனை சங்கிலியால் கட்டி வைத்திருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் செயின் பறித்ததாக 13 வயது சிறுவனை 5 நாட்களாக காவல் நிலையத்திலேயே சங்கிலியால் பிணைத்து ஜன்னலில் கட்டிவைக்கப்பட்டிருக்கும் காட்சி அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.
 
இது குறித்து பிரகாசம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஸ்ரீகாந்த் கூறுகையில், சிறுவன் பிடிபட்ட சம்பவத்தன்று காவல்நிலையத்தில் ஒரே ஒரு காவலர் மட்டுமே இருந்துள்ளார். அவர் சாப்பிடுவதற்கு வெளியே செல்லும் போது சிறுவன் தப்பி ஓடிவிடாமல் இருப்பதற்காகவே சங்கிலியால் கட்டி போட்டதாகவும், மேலும் இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கூறினார்.
 
5 நாட்களாக சிறுவனை காவல் நிலையத்தில் சங்கிலியால் கட்டிப்போட்டது கடும் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.