1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Ilavarasan
Last Modified: செவ்வாய், 21 ஏப்ரல் 2015 (18:28 IST)

ஒடிசாவின் முன்னாள் முதல்வர் ஜே.பி.பட்நாயக் மரணம்

ஒடிசா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், அசாமின் முன்னாள் ஆளுநருமான ஜே.பி.பட்நாயக் நேற்று இரவு காலமானார்.  வருக்கு வயது 89. நேற்று நள்ளிரவு அவருக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்டு அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
 
எனினும் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.  அவரது உடல் புவனேஸ்வர் கொண்டு செல்லப்பட்டது. அவரது இறுதிச் சடங்கு புரி நகரில் நடைபெறவுள்ளது.  ஜானகி பல்லப் பட்நாயக், 3 முறை ஒடிசா முதல்வராக இருந்துள்ளார். அவரது மறைவுக்கு முதல்வர் நவீன் பட்நாயக், ஆளுநர் எஸ்.சி.ஜமீர்
 
மற்றும் அனைத்து கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்துள்ளனர். மேலும், ஒரு வார காலமாக துக்கம் அனுசரிக்கப்படுவதாக ஒடிசா அரசு அறிவித்துள்ளது.