61 இந்திய மீனவர்கள் பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக, 61 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் அதிகாரிகள் நேற்று (வியாழக்கிழமை) கைது செய்தனர். அவர்களது 11 படகுகளையும் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை கராச்சியிலுள்ள டோக்ஸ் காவல் நிலையத்தில் வைத்துள்ளதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர்கள் மீது எல்லை தாண்டி மீன் பிடிக்க சென்றதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.