1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : செவ்வாய், 23 மே 2017 (16:52 IST)

திடீரென மாயமான இந்திய போர் விமானம்

இந்திய விமான படைக்கு சொந்தமான போர் விமானத்தில் விமானிகள் பயிற்சியில் ஈடுப்பட்டிந்தபோது திடீரென மாயமானது.




 

 
அசாம் மாநிலம் தேஜ்பூர் அருகே இந்திய விமான படைக்குக்கு சொந்தமான சு-30 எனப்படும் சுகோய்-30 என்ற போர் விமானத்தில் இரண்டு விமானிகள் பயிற்சியில் ஈடுப்பட்டு இருந்தனர். அப்போது திடீரென விமானம் காணாமல் போனது. ரேடார் சிக்னலில் இருந்து 60 கி.மீ தொலைவில் விமானம் காணாமல் போனதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
 
ராணுவ ரேடாரில் இருந்து போர் விமானம் காணாமல் போனதால் விமானம் குறித்து எந்த தகவலும் உறுதியாக தெரியவில்லை. மேலும் அதில் பயணித்த இரண்டு விமானிகளின் நிலை குறித்தும் எந்த தகவலும் இல்லை. இதையடுத்து விமானத்தை தேடும்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ரேடாரில் இருந்து மறைந்த இடத்தை சுற்றி தீவிரமாக தேடி வருகின்றனர்.
 
இதேபோல் சென்னையில் இருந்து புறப்பட்ட ஒரு போர் விமானம் ரேடாரில் இருந்து காணாமல் போனது குறிப்பிடத்தக்கது.