வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: ஞாயிறு, 25 ஜனவரி 2015 (19:04 IST)

அமெரிக்காவின் முதன்மை முன்னுரிமையாக இந்தியாவுடனான ஆழ்ந்த உறவு நீடிக்கும்: ஒபாமா உறுதி

டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியும் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவும் இன்று கூட்டாக பேட்டியளித்தனர்.
அப்போது ஒபாமா பேசியதாவது:-
 
இயற்கையான நட்பு நாடுகளான இந்தியாவும் அமெரிக்காவும் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளன.
 
எங்கள் நாட்டின் வெளியுறவு கொள்கையின் முதன்மை முன்னுரிமையாக இந்தியாவுடனான உறவு நீடிக்கும். இரு நாடுகளுக்கிடையிலான அணு ஒப்பந்தத்தை மேம்படுத்தி செயல்படுத்துவது தொடர்பான இரு பிரச்சனைகளுக்கு இன்று வரலாற்று சிறப்புக்குரிய தீர்வு எட்டப்பட்டுள்ளது. இதனை முழுவீச்சில் செயல்படுத்துவதற்கு நாங்கள் உறுதியேற்றுள்ளோம்.
 
ஆப்கானிஸ்தான் மக்களுக்கு நாங்கள் நம்பத்தகுந்த, வலிமையான கூட்டாளிகளாக இருப்போம்.