வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Bharathi
Last Updated : ஞாயிறு, 4 அக்டோபர் 2015 (09:40 IST)

உத்திரப்பிரதேசத்தில் கொடூரம்: முக்காடு போடாத 6 வயது மகளை அடித்துக் கொன்ற தந்தை

உத்திரப்பிரதேசத்தில் முக்காடு போடாத 6 வயது சிறுமியை அவரது தந்தையே அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


 
 
உத்திரப்பிரதேச மாநிலம் பேரலியில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினர் தங்களது தலையில் முக்காடு போட்டுக்கொள்வது வழக்கம்.  இந்த கிராமத்தைச் சேர்ந்த  ஜாஃபர் அலியாஸ் சந்த் மியான் என்பவர் தனது வீட்டில் உள்ள பெண்கள் முக்காடு அணிய வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்துபவர். இந்த விஷயத்தில் அவர் கண்டிப்பானவர் என்று கூறப்படுகிறது.
 
இந்நிலையில் நேற்று இரவு ஜாஃபர் தன் குடும்பத்தினருடன் உணவு அருந்திக் கொண்டிருந்தார். அப்போது அவரது ஆறு வயது மகள், தலையில் முக்காடு அணியால் உணவு உட்கொண்டு இருந்ததாக தெரிகிறது.
 
இதனால் ஆவேசமடைந்த ஜாஃபர், தனது மனைவியை கடுமையாக தாக்கிவிட்டு,பின்னர் 6 வயது மகளின் தலையை பிடித்து தரையில் அடித்தார்.  இதில் நிலைகுலைந்து போன அந்தச் சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
 
இது குறித்து ஜாஃபரின் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில் அவரை போலீசார் கைது செய்தனர். முக்காடு அணியாததற்காக 6 வயது மகளை அவரது தந்தையே அடித்துக் கொலை செய்த சம்பவம் உத்திரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.