வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Tamilarasu
Last Updated : வெள்ளி, 29 மே 2015 (14:44 IST)

மோடிக்கு எதிராக பிரச்சாரம்: மாணவர் அமைப்புக்கு தடைவிதித்த ஐஐடி!

மத்திய அரசையும், மோடியையும் விமர்சித்து பிரச்சாரம் செய்த ஏபிஎஸ்சி என்ற மாணவர் அமைப்புக்கு சென்னை ஐஐடி நிர்வாகம் தடை விதித்துள்ளது.
 
சென்னை ஐஐடியில் ஏபிஎஸ்சி என்ற அம்பேத்கார் பெரியார் கல்வி மையம் என்னும் அமைப்பை சில மாணவர்கள் இணைந்து நடத்தி வருகின்றனர்.
 
மத்திய அரசையும், மோடியையும் விமர்சித்து பிரச்சாரம் செய்வதாக, இந்த அமைப்பு மீது மத்திய மனிதவள மேம்பாட்டு துறைக்கு சில புகார்கள் வந்துள்ளது. இதற்கு விளக்கம் கேட்டு ஐஐடி நிர்வாகத்திற்க்கு கடிதம் அனுப்பபட்டது.
 
இந்நிலையில் தற்போது ஏபிஎஸ்சி அமைப்புக்குத் தடை விதித்துள்ளது ஐஐடி நிர்வாகம்.