வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: ஞாயிறு, 14 டிசம்பர் 2014 (17:22 IST)

காங்கிரஸை விட்டு யாராவது வெளியேற விரும்பினால், அவர்களை நாங்கள் தடுக்க மாட்டோம் - திக்விஜய் சிங்

காங்கிரஸ் கட்சியை விட்டு யாராவது வெளியேற வேண்டும் என்று விரும்பினால், அவர்களை நாங்கள் தடுக்க மாட்டோம் என அக்கட்சியின் மூத்த தலைவர் திக்விஜய் சிங் தெரிவித்தார்.
 
இது குறித்து கருத்து தெரிவித்த அவர், “காங்கிரஸ் கட்சியை விட்டு யாராவது வெளியேற வேண்டும் என்று விரும்பினால், அவர்களை நாங்கள் தடுக்க மாட்டோம். ஆனால், அதேநேரத்தில் அரசியலில் இருப்பதற்கு ஒரு கொள்கை வேண்டும்.
 
கட்சியை விட்டு வெளியேறினாலும், காங்கிரஸ் கட்சியின் கொள்கையை தொடர்ந்து கடைபிடிக்கும்படி அவர்களை கேட்டுக் கொள்கிறேன். காங்கிரஸில் இருந்து வெளியேறி, தனியாக பிராந்திய அளவிலான கட்சிகளை ஆரம்பிப்பதும், பின்னர் காங்கிரஸýக்கு திரும்பி வருவதும் அவ்வப்போது நடந்து வருகின்றன” என்று தெரிவித்துள்ளார்.