வியாழன், 18 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By வீரமணி பன்னீர்செல்வம்
Last Modified: புதன், 1 ஜூலை 2015 (18:56 IST)

”அழகை வைத்து பதவி உயர்வு பெற்றேனா?”: பெண் ஐஏஎஸ் அதிகாரி ஆவேசம்!

அழகை வைத்து பதவி உயர்வு பெற்றேனா என்று தெலங்கானா ஐஏஎஸ் அதிகாரி ஆவேசமாகக் கேள்வியெழுப்பி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

 
தெலுங்கானா மாநில அரசுத்துறையில் பணியாற்றும் பெண் ஐஏஎஸ் அதிகாரி ஸ்மிதா சபர்வால். இவர் முதல்வர் சந்திரசேகரராவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
 
பெண் அதிகாரி ஸ்மிதா சபர்வால், தனது அழகை வைத்து பதவி உயர்வு பெறுவதாக பிரபல ஆங்கில வார இதழ் அவுட்லுக் செய்தி வெளியிட்டது. அதிகாரியின் பெயரை குறிப்பிடாமல் அவரது அழகு, அவர் உடை அணியும் விதம், பணியில் பதவி உயர்வுக்கு மேல் பதவி உயர்வு வாங்கியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் அவர் சமீபத்தில் நடந்த பேஷன் ஷோவில், ஜீன்ஸ் பேண்ட் மற்றும் பிரில் வைத்த சட்டை போட்டு வந்து அனைவரையும் அசத்திவிட்டார் என்று தெரிவித்துள்ளதுடன், அந்த நிகழ்ச்சி தொடர்பாக கேலிச்சித்திரமும் வெளியிட்டுள்ளது. இது தெலங்கானா மாநில அதிகாரிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
 

 
இதை பார்த்த பெண் ஐஏஎஸ் அதிகாரி ஸ்மிதா ஆவேசம் அடைந்தார். என்னை ஆபாசமாக சித்தரித்ததற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று செய்தி வெளியிட்ட இதழுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். "என்னைப் பற்றி தவறான கண்ணோட்டத்தில் கீழ்த்தரமாக சித்தரிக்கப்பட்டுள்ளது. எனவே 15 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்று பெண் அதிகாரி ஸ்மிதா நிபந்தனையும் விதித்துள்ளார்.
 
மக்களின் அதிகாரி என்று பெயர் எடுத்த ஸ்மிதா, மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர். 1977 ஆம் ஆண்டு பிறந்தார். 2001 ஆம் ஆண்டு நடந்த ஐஏஎஸ் தேர்வில் இந்திய அளவில் 4 ஆவதாகத் தேர்ச்சி பெற்றார்.
 
ஒருங்கிணைந்த ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மதனபள்ளியில் துணை ஆட்சியராகப்   பொறுப்பேற்றார். பல ஆண்டுகள் ஆந்திராவில் பணியாற்றிய பிறகு அவர், கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கரீம்நகர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார்.
 
2014 ஆம்  ஆண்டு ஜூன் மாதம் முதல் தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவின் செயலாளராகப்  பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.