வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: வெள்ளி, 3 ஜூலை 2015 (21:22 IST)

கடன் கொடுக்க இயலாமல் மனைவியை அடகு வைத்த கணவர்

வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க முடியாததால், கணவர் ஒருவர் அண்ணனிடம் மனைவியை விட்டுக் கொடுத்துள்ளார்.
 
ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சய் என்பவர் தனது மூத்த சகோதரர் விஜய் என்பவரிடம், 25 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்துள்ளார். இதை அவரால் திருப்பிச் செலுத்த முடியவில்லை.
 
இதனையடுத்து, சகோதரர் விஜய்யும், அவரின் நண்பர் ஒருவரும் தொடர்ந்து விஜய்யிடம் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளனர். இந்நிலையில், விஜய்யும், அவருடைய நண்பரும் தனது சகோதரர் சஞ்சய் வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது, சஞ்சய் மற்றும் அவரின் மனைவி பிரமிளா ஆகியோர் மட்டும் வீட்டில் இருந்துள்ளனர்.
 
அண்ணனும், அவருடைய நண்பரும் கணவர் சஞ்சய், மனைவி பிரமிளாவை மட்டும் வீட்டில் தனியாக விட்டு விட்டு வெளியில் சென்றுள்ளார். இதனையடுத்து சகோதரர் விஜய்யும், அவரின் நண்பரும் பிரமிளாவை மாறி மாறி பலாத்காரம் செய்துள்ளனர். பின்னர் இருவரும் வீட்டை வெளியில் பூட்டி விட்டு சென்றனர்.
 
இதுபோன்று தொடர்ந்து ஒரு வாரத்துக்கும் மேலாக, பிரமிளாவுக்கு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதற்கிடையே பலாத்காரம் தொடர்ந்ததால், பிரமீளாவின் உடல்நிலை மோசமடைந்தது. இந்த தகவல் பிரமீளாவின் பெற்றோருக்கு தெரியவந்தது.
 
இதனையடுத்து அவர்கள் பிரமிளாவை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து தகவல் அறிந்ததும் கணவர் சஞ்சய், அவரது சகோதரர் விஜய், மற்றும் நண்பர் ஹர்கேஷ் மூவரும் தலைமறைவாகிவிட்டனர். தலைமறைவான மூவரையும் வழக்குப் பதிவு செய்து காவல் துறையினர் தேடி வருகின்றனர்.