1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Caston
Last Modified: திங்கள், 31 ஜூலை 2017 (12:02 IST)

மனைவியை கூட்டு பலாத்காரம் செய்ய அனுமதி கொடுத்த கணவன்: சீரழித்து தூக்கி வீசப்பட்ட பெண்!

மனைவியை கூட்டு பலாத்காரம் செய்ய அனுமதி கொடுத்த கணவன்: சீரழித்து தூக்கி வீசப்பட்ட பெண்!

மனைவியை பலாத்காரம் செய்ய கணவனே அனுமதி கொடுத்த கொடுமையான சம்பவம் ஹரியானா மாநிலத்தில் நடந்துள்ளது.


 
 
ஹரியானா மாநிலம் சிர்ஷா பகுதியில் ஒருவர் தனது மனைவியை பாலியல் பலாத்காரம் செய்ய மூன்று பேர் கொண்ட கும்பலுக்கு அனுமதி கொடுத்துள்ளார். அதன் பின்னர் அந்த கும்பர் அந்த பெண்ணை மிக கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளது.
 
பலாத்காரம் செய்த பின்னர் அந்த அப்பாவி பெண்ணை அந்த மூன்று பேரும் சாலையில் தூக்கி வீசிவிட்டு சென்றுள்ள மிருகத்தனமான சம்பவமும் அங்கு நடந்துள்ளது. இதனையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அந்த பெண்ணின் கணவர், மாமியார், மைத்துனி மற்றும் பலாத்காரம் செய்த மனித மிருகங்கள் 3 பேர் என மொத்தம் 6 பேர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.