வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 12 பிப்ரவரி 2016 (05:05 IST)

அந்த கடிகாரம் வெறும் 10 லட்சம் தான்: சொல்வது சித்தராமையா

அந்த கடிகாரம் வெறும் 10 லட்சம் தான்: சொல்வது சித்தராமையா

அந்த கடிகாரம் வெறும் 10 லட்சம் தான் என கர்நாடா முதல்வர் சித்தராமையா விளக்கம் கொடுத்துள்ளார்.
 

 
முன்னாள் அமைச்சர் அதகூரு ஹூச்சேகவுடா விஸ்வநாத் உடல்நலக்குறைவு காரணமாக மைசூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
 
முதல்வர் சித்தராமையா கடந்த வாரம் வந்து அவரை சந்தித்து ஆறுதல் கூறினார். அப்போது அவரது மிகவும் விலை உயர்ந்த ஹுப்லோட் வாட்ச் கட்டியிருந்தார்.
 
நான் விசாரித்த வரையில் இந்த வாட்ச்-ன் மதிப்பு, ரூ. 68 லட்சத்து 56 ஆயிரம் ஆகும். மேலும், சுங்க வரியுடன் சேர்த்து 70 லட்சம் ரூபாய் ஆகும். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது என முன்னாள் முதல்வரும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மாநிலத் தலைவருமான குமாரசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
 
இந்த குற்றச்சாட்டுக்கு முதல்வர் சித்தராமையா விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், குமாரசாமி யார், அவரது வரலாறு என்ன என்பன எல்லாம் அரசியல் தலைவர்கள் அனைவருக்கும் தெரியும். ஏன் மக்களுக்கே நன்கு தெரியும். அந்த வாட்ச்கு 10 லட்ச ரூபாய் கொடுத்தால் போதும், நான் அந்த கைக்கடிகராத்தை விற்க தயாராக உள்ளேன் என்கிறார்.
 
ஆக மொத்தம், முதல்வர் சித்தராமையா கையில் கட்டியுள்ள வாட்ச் 10 லட் ரூபாய் மதிப்புடையது என அவரது வாயில் இருந்தே வெளியிப்பட்டுள்ளது.