வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : வியாழன், 20 அக்டோபர் 2016 (17:09 IST)

போலீஸ் துப்பாக்கிகளுடன் பயங்கரவாதிகள் கொண்டாட்டம் (வீடியோ)

ஜம்மூ காஷ்மீரில் போலீஸ் படையிடம் இருந்து பறித்த துப்பாக்கிகளுடன் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாதிகள் மகிழ்ச்சியை கொண்டாடி உள்ளனர். இதுதொடர்பான வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். 


 

 
 
காஷ்மீரில் ஹிஸ்புல் முகாஜிதீன் பயங்கரவா இயக்க தளபதி பர்கான் வானி சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு வன்முறை வெடித்தது. அப்பகுதி மக்கள் ரானுவதிற்கு எதிராக கற்களையும் புகை குண்டுகளையும் வீசி போராட்டம் செய்தனர்.
 
அதைத்தொடர்ந்து அண்மையில் எல்லையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். சர்ஜிகல் ஸ்டிரைக் என்ற பெயரில் இந்திய ராணுவம் எல்லை தாண்டி பதில் தாக்குதல் நடத்தியது.
 
அதைத்தொடர்ந்து காஷ்மீர் பகுதியிலும் பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணியை பாதுகாப்பு படை தீவிரப்படுத்தி வருகிறது. மாநிலத்தில் நடைபெற்ற வன்முறை போராட்டங்களின் போது மாநில காவல்துறையினரிடம் இருந்து இளைஞர்கள் துப்பாக்கிகளை பறித்த சம்பவம் நடைப்பெற்றது.
 
மேலும் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் காவல்துறையினரிடம் இருந்து ஆயுதங்களை திருடிச் சென்றனர். கட்ந்த 3 மாதத்தில் 67 ஆயுதங்களை பயங்கரவாதிகள் பறித்து சென்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
 
இதனால் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சமும் இருந்தது. இந்நிலையில் காவல்துறையினரிடம் இருந்து பறித்த துப்பாக்கிகளுடன் பயங்கரவாதிகள் மகிழ்ச்சியை கொண்டாடியுள்ளனர். இதை வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளனர். 

 
நன்றி: Oneindia Hindi