வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Suresh
Last Updated : புதன், 30 ஜூலை 2014 (11:58 IST)

இமாச்சலபிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து 20 பேர் பலி

இமாச்சலபிரதேச தலைநகர் சிம்லாவில் இருந்து சவெரகுட் நகருக்குச் சென்ற அரசுப் பேருந்து மலைப்பாதை வழியாக சென்றபோது பெரிய பள்ளத்தில் கவிழ்ந்ததில் 20 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தால், சம்பவ இடத்திலேயே 20 பயணிகள் உடல் நசுங்கி பலியானார்கள். இதில் 17 பேரின் உடல் உடனடியாக மீட்கப்பட்டது. நொறுங்கிய பேருந்துக்குள் சிக்கிய 3 பேரின் உடல்கள் நீண்டநேரப் போராட்டத்திற்குப் பிறகு மீட்கப்பட்டது.

மேலும், 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிம்லாவில் உள்ள இந்திராகாந்தி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது. பேருந்து கவிழ்வதற்கு முன்னதாக ஓட்டுநர் குதித்து விட்டதால் அவர் காயமின்றி உயிர் தப்பினார்.

மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களை அம்மாநில முதலமைச்சர் வீரபத்ர சிங் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.