வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Updated : வெள்ளி, 7 ஏப்ரல் 2017 (13:03 IST)

மூதாட்டியை பலாத்காரம் செய்த பிளம்பர்: அவமானம் தாங்காமல் மூதாட்டி தற்கொலை!!

வயது வித்தியாசம் இல்லாமல் இப்போது பாலியல் தொல்லைகள் அதிகரித்து விட்டன. அந்த வகையில் கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டத்தில் 70 வயது மூதாட்டியை பிளம்பர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தார். 


 
 
70 வயது பாட்டியை ஒரு பிளம்பர் பாலியல் பலாத்காரம் செய்ய தற்போது அந்த பாட்டி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 
ராஜீவன் இரிட்டி நகர மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பகுதி செயலாளர். சம்பவ நாளன்று ராஜீவன் பாட்டி வீட்டுக்கு பிளம்பிங் வேலைக்காக வந்துள்ளார். 
 
அப்போது பாட்டியை கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மூதாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளார். 
 
இதும்குறித்து போலீசார் விரைவில் ராகிவன் கைது செய்ய படுவார் என தெரிவித்துள்ளனர்.